Saturday, March 10, 2012

நரகமே வேண்டும்...


அவர் ஒரு பெரிய ஜென் துறவி. தினமும் பொதுமக்களைச் சந்தித்து உபதேசங்கள் செய்வார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வார், பாடம் நடத்துவார், பிரார்த்தனை செய்வார்!

ஒருநாள், இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது ஒருவர் கேட்டார். ‘குருவே, நீங்கள் இறந்தபின் என்ன ஆவீர்கள்? சொர்க்கத்துக்குச் செல்வீர்களா? அல்லது நரகத்துக்கா?’

துறவி கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னார். ‘நிச்சயமாக நரகத்துக்குதான் செல்வேன்!’

கேள்வி கேட்டவன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘நரகத்துக்கா?’ என்று அதிர்ச்சியோடு கேட்டான். ‘ஆனால் உங்களைமாதிரி புண்ணிய ஆத்மாக்கள் சொர்க்கத்துக்குதான் செல்வார்கள் என்று நான் படித்திருக்கிறேனே’ என்றான் தயக்கத்தோடு.

‘உண்மைதான். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை’ என்றார் துறவி. ‘சொர்க்கத்தில் எல்லோரும் ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு என்னைப்போன்ற வழிகாட்டியின் துணை அவசியப்படாது. ஆனால் நரகத்தில் பலருக்கு நான் தேவைப்படுவேன். அவர்களுக்குச் சேவை செய்வதில்தான் எனக்கு மகிழ்ச்சி!’

#படித்ததில் பிடித்தது  

No comments:

Post a Comment