Saturday, March 10, 2012

வீண்...


சீனாவில் ஓர் அரசர். தன்னுடைய அமைச்சரை அழைத்தார். ‘நம்ம நாட்டில் பசுமை குறைஞ்சுகிட்டே வருதே, கவனிச்சீங்களா?’ என்றார்.

‘ஆமாம் அரசே, மக்கள் சொந்த லாபத்துக்காகக் காடுகளை அழிக்கறாங்க’ என்றார் அமைச்சர். ’ஆனா அவங்களையும் நாம பெருசாக் குத்தம் சொல்லமுடியாது. வீடுகளைக் கட்டறது, பாலங்களை அமைக்கறது, தொழிற்சாலைகளைக் கட்டறதுன்னு எல்லாத்துக்கும் மரங்கள் தேவைப்படுது. நாம மரம் வெட்டறதைத் தடை செஞ்சுட்டா, முன்னேற்றம் கெட்டுப்போகும்.’

’வருங்கால முன்னேற்றத்துக்காக நம் நிகழ்காலத்தைத் தியாகம் செய்யக்கூடாது அமைச்சரே’ என்றார் அரசர். ‘அதேசமயம், நீங்க சொல்ற விஷயம் எனக்குப் புரியுது. நாம மரம் வெட்டறதைத் தடை செய்யவேண்டாம். கட்டுப்படுத்துவோம். கூடவே நம்ம நாடுமுழுக்க எல்லா இடத்திலயும் மரம் வளர்க்கணும்’ என்று உத்தரவிட்டார்.

‘ஆனா, இதெல்லாம் செஞ்சு முடிக்கறதுக்குப் பல வருஷமாகுமே!’ என்று தயங்கினார் அமைச்சர்.

‘உண்மைதான். அதனால நாம ஒரு விநாடியைக்கூட வீணடிக்கக்கூடாது. இப்பவே மரக்கன்றுகளை நட ஆரம்பித்துவிடுங்கள்!’

---
நேரம் இல்லை என்பதற்காகச் சிறிய, பெரிய வேலைகளைத் தள்ளிப்போடுகிறவர்களுக்குப் பாடம் சொல்லும் ஜென்  கதை இது. அப்படி நினைத்து நேரத்தை வீணடிப்பதைவிட, வேலையில் இறங்குங்கள், நாடுமுழுவதும் பசுமை பரப்ப எத்தனை வருஷம் ஆகுமோ என்று யோசித்துக் கவலைப்படுவதற்குப் பதிலாக, இந்த விநாடியில் சில மரக்கன்றுகளையேனும் நட்டு முடித்து மன நிறைவு அடையலாம்!

#படித்ததில் பிடித்தது 

No comments:

Post a Comment