வனத்தில் ஒரு தவளைக் குடும்பம் வசித்து வந்தது.
அம்மா தவளை சந்தோஷமாகக் குதித்துச் சொன்னது, “இந்தப் பூமி இருப்பது தவளைகளுக்காக. இந்தக் காற்று இருப்பது தவளைகளுக்காக. நீர்நிலை, தாவரங்கள், புழுக்கள், பூச்சிகள் எல்லாம் இருப்பது தவளைகளுக்காக!”
குட்டித் தவளைகளும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு குதித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு அங்கே ஊர்ந்து வந்தது. லபக்லபக் என்று இரண்டு தவளைகளைப் பிடித்துத் தின்றது.
மற்ற தவளைகள் ஓடி ஒளிந்துகொள்ள, பயந்துபோன குட்டித் தவளையிடம் அம்மா சொன்னது, ‘பாம்புகள் இருப்பதும் தவளைகளுக்காகத்தான்!’
#படித்ததில் பிடிதது
No comments:
Post a Comment