Sunday, January 29, 2012

கரப்பான் பூச்சி....

உலகிலேயே வேகமாக ஓடும் பூச்சி கரப்பான் பூச்சி. இவை இறக்கைகள் பெற்றிருந்தாலும் பறப்பது ஒரு சில சமயங்களில் மட்டுமே.

கரப்பான் பூச்சி வாசனை உணர்வை அறிந்துக் கொள்வதில் நிகரற்றவை. தூரத்தில் இருந்தபடியே வெகு தொலைவில் உள்ள பொருட்களைக் கூட வாசனை நுகர்ந்து அறிந்து கொள்கின்றன. கரப்பான் பூச்சி கால்பட்ட இடமெல்லாம் துர்நாற்ற மடிக்கும்.

ஒரு கரப்பான் பூச்சியின் தலையை, அதன் உடலில் இருந்து மிகச் சரியாக அறுத்து அகற்றிவிட்டால் ஏழு மணி நேரம் தலையில்லாமலே அது உயிர் வாழும்.

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment