Sunday, July 22, 2012

நல்லா கடிச்சு சாப்பிடணும்...

அப்போது எனக்கு 4வயது இருக்கும்...தினமும் இரவுச் சாப்பாடு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்...ஒருவருக்கொருவர் பரிமாறிகொள்வது...

ஒருநாள்...
நானே சாப்பிடுகிறேன் என்றது ம் அம்மாவுக்கு சந்தோஷம்...தட்டில் சாப்பாடு போட்டு நன்றாக பிசைந்து என் கையில் கொடுத்தார் அம்மா...
முதல் வாய் சாபிட்டேன்...பாதி கீழே இரைத்தேன்...மீதி வாய்க்குள் போனது...
இரெண்டு...மூன்று...வாய் சாப்பிட்டதும் புறைக்கேறியது...அம்மா தணணீர் கொடுத்தாரகள்...

அப்போது...
நல்லா கடிச்சு சாப்பிடு...என்றார் அப்பா...

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை இல்லையா?

அதான் இன்னமும் தொடர்கிறேன்...ஆனால் அப்பா சொன்னது சாப்பாட்டுக்கு மட்டும் என்பது பிறகுதான் புரிந்தது...

No comments:

Post a Comment