Wednesday, December 21, 2011

யார் செய்தால் என்ன?

முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,
”பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.  அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.  என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.

இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது. என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.”

முல்லா சொன்னார், ’அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா? யார் செய்தால் என்ன?”

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment