ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி
போதித்து வந்தார். நிதானமாகவும் அதே சமயம் அவர்கள்
மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்த
வேகம் மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை.
ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை
விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே
இருக்கிறார்’ என்று குற்றம் சாட்டினான்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை
அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக்
காண்பித்து ‘அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை’
என்றார்.
விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன் அதன் கனம்
தாங்காமல் தவித்தான். ‘தூக்க முடியவில்லை’ என்று தன்
தோல்வியை ஒப்புக் கொண்டான்.
இப்போது கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சமாகக்
கொண்டு வை’ என்றார் ஞானி.
அவனும் அவ்வாறே கொண்டு வைத்தான். விரைவில்
விறகுகள் இடம்பெயர்ந்தன.
‘உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன்
மூளைக்குள் திணித்தால் நீ திணறித்தான் போவாய். கொஞ்சம்
கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக்
கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கும்’
என்று விளக்கினார் ஞானி.
மாணவன் புரிந்து கொண்டான்.
போதித்து வந்தார். நிதானமாகவும் அதே சமயம் அவர்கள்
மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்த
வேகம் மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை.
ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை
விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே
இருக்கிறார்’ என்று குற்றம் சாட்டினான்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை
அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக்
காண்பித்து ‘அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை’
என்றார்.
விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன் அதன் கனம்
தாங்காமல் தவித்தான். ‘தூக்க முடியவில்லை’ என்று தன்
தோல்வியை ஒப்புக் கொண்டான்.
இப்போது கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சமாகக்
கொண்டு வை’ என்றார் ஞானி.
அவனும் அவ்வாறே கொண்டு வைத்தான். விரைவில்
விறகுகள் இடம்பெயர்ந்தன.
‘உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன்
மூளைக்குள் திணித்தால் நீ திணறித்தான் போவாய். கொஞ்சம்
கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக்
கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கும்’
என்று விளக்கினார் ஞானி.
மாணவன் புரிந்து கொண்டான்.
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment