ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருந்தார் முல்லா.
அப்போது அங்கு கிடந்த குப்பையின் மத்தியில் ஏதோ
மின்னுவதைக் கண்டு அதை ஆர்வமாய் எடுத்துப் பார்த்தார்.
அது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் உடைந்த துண்டு.
முல்லா அதில் தன் முகத்தைப் பார்த்தபோது, அருடைய
உருவம் அதில் விகாரமாய்த் தெரிந்தது. ”சே! இந்த
கண்ணாடி முகத்தை விகாரமாகக் காட்டுவதால்தான்
இதைக் குப்பையில் போட்டுவிட்டார்கள் போல” என்று
முல்லா கூறினார்.
இதைக்கேட்ட ஒருவன், ”ஏன், கண்ணாடியை குறை
கூறுகிறீர்கள்? கண்ணாடி விகார முகத்தைக் காட்டுகிறது
என்று சொல்கிறீர்களே… தவறு யாருடையது?” என்று
கேட்டான்.
”தவறு என்னுடையதுதான்” என்று கூறிய முல்லா,
கண்ணாடியைக் குப்பையில் வீசிவிட்டு, ”என்னுடைய
தவறு என்ன தெரியுமா? இக்கண்ணாடியைக்
குப்பையிலிருந்து எடுத்துப் பார்த்ததுதான்” என்று சொன்னார்.
அப்போது அங்கு கிடந்த குப்பையின் மத்தியில் ஏதோ
மின்னுவதைக் கண்டு அதை ஆர்வமாய் எடுத்துப் பார்த்தார்.
அது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் உடைந்த துண்டு.
முல்லா அதில் தன் முகத்தைப் பார்த்தபோது, அருடைய
உருவம் அதில் விகாரமாய்த் தெரிந்தது. ”சே! இந்த
கண்ணாடி முகத்தை விகாரமாகக் காட்டுவதால்தான்
இதைக் குப்பையில் போட்டுவிட்டார்கள் போல” என்று
முல்லா கூறினார்.
இதைக்கேட்ட ஒருவன், ”ஏன், கண்ணாடியை குறை
கூறுகிறீர்கள்? கண்ணாடி விகார முகத்தைக் காட்டுகிறது
என்று சொல்கிறீர்களே… தவறு யாருடையது?” என்று
கேட்டான்.
”தவறு என்னுடையதுதான்” என்று கூறிய முல்லா,
கண்ணாடியைக் குப்பையில் வீசிவிட்டு, ”என்னுடைய
தவறு என்ன தெரியுமா? இக்கண்ணாடியைக்
குப்பையிலிருந்து எடுத்துப் பார்த்ததுதான்” என்று சொன்னார்.